Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

Advertiesment
பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
, வியாழன், 16 டிசம்பர் 2021 (08:19 IST)
பிரியங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் திடீர் ஆர்ப்பாட்டம்: அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்
பஞ்சாப் மாநிலத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து காங்கிரஸ் பாஜக உள்பட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரியங்கா காந்தி பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார்/ இந்த கூட்டத்தில் அம்மாநிலத்தின் முதல்வர் சரண்ஜித் சிங் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பிற்கு போடப்பட்டிருந்த காவல்துறையினர் ஆசிரியர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அவர்களை பேச முடியாதபடி வாயில் துணியை வைத்து வெளியேற்றினர்
 
பஞ்சாப் மாநில அரசு வேலைவாய்ப்பில் சுணக்கம் காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொல்கத்தா துர்கா பூஜைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்!