Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று: பிரிட்டனில் உச்சத்தில் 3வது அலை

ஒரே நாளில் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று: பிரிட்டனில் உச்சத்தில் 3வது அலை
, வியாழன், 16 டிசம்பர் 2021 (08:11 IST)
கொரோனா வைரஸ் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை ஓய்ந்து தற்போது ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை தோன்றி உள்ளது என்பதும் பிரிட்டன் அமெரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மூன்றாவது அலை மிக கடுமையாக வீசி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி பிரிட்டனில் மூன்றாவது அலை மிக மோசமாக பரவி வருவதாகவும் நேற்று ஒரே நாளில் பிரிட்டனில் 78 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
பிரிட்டனில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சுமார் 1.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர் என்பதும் 96 லட்சம் பேர் தற்போது கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகளை அடுத்து பாதிப்பில் பிரிட்டன் கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் திடீரென உள்வாங்கிய கடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!