Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது : முட்டுக்கொடுக்கும் குருமூர்த்தி

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (07:53 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் புதைக்க அனுமதிக்கக்கூடாது என துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.30 மணிக்கு காலமானார். இவரது உடலை மெரினாவில் அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்க செய்ய தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறி, கிண்டி காமராஜர் நினைவிடத்தில் அவரை உடலை புதைக்க அரசு நிலம் ஒதுக்கியது.
 
இது தொடர்பாக நேற்று இரவு நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று காலை 8.30 மணிக்கு மறு விசாரணைக்கு வர இருக்கிறது. மேலும், மெரினாவில் தலைவர்களின் உடலை புதைக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்திருந்த அனைவரும் அந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். எனவே, அரசு தரப்பில் பதில் தர போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துக்ளக் குருமூர்த்தி “ முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் தரவேண்டும். முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்ய இடம் தருவதே மரபு. அதனால், கலைஞருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தரக்கூடாது” என அவர் கூறினார். 
 
இவரின் கருத்து திமுக ஆதரவாளர்களுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments