Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் ஐசியுவில் அனுமதி: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (13:57 IST)
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவான ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதன் குறிப்பிடத்தக்கது. 
 
இதனை அடுத்து பொது இடங்களில் செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மதுரை திண்டுக்கல் கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் தலா மூன்று பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேற்று இரண்டு பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் இன்று மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments