Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெரியாமல் ட்விட் செய்துவிட்டேன்: புலம்பெயர் தொழிலாளர் குறித்து ட்விட் செய்த பாஜக பிரபலம்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (13:51 IST)
புலம்பெயர் தொழிலாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டரில் பதிவு செய்த பாஜக பிரபலம் தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் நிபந்தனை இன்றி மன்னிப்பு கேட்க தயார் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
புலம்பெயர் தொழிலாளர் குறித்து பாஜகவின் பிரசாந்த் உம்ராவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வதந்தி பரப்பிய நிலையில் அவர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்தது. 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்த நிலையில் பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் தவறு என்று தெரிந்தவுடன் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன் என்றும் இந்த விவகாரத்தில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பேன் என்றும் உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்துள்ளார். 
 
இதனை அடுத்து இதுகுறித்து பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments