Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? அரசு எடுக்கும் முடிவு என்ன??

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா? அரசு எடுக்கும் முடிவு என்ன??
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:21 IST)
ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார். 

 
ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்திருந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டக்குழுவினர் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களில் சிலர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என்று கூறினாலும் போராட்டக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தெரிவித்தனர். 
 
இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்டெர்லைட் ஆலையை இயக்க நிச்சயமாக தமிழக அரசு அனுமதிக்காது என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழக அரசு இது குறித்து என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய விமானங்களுக்கு தடை விதித்த மற்றொரு நாடு!