Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 12 நோயாளிகள் பலி!

கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 12 நோயாளிகள் பலி!
, வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (07:43 IST)
கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 12 நோயாளிகள் பலி!
கொரோனா வைரஸ் பாதிப்பாலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் பலர் மாண்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து ஒன்றில் 12 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் நாசிக் மாவட்டத்தில் ஆக்சிஜன் கசிவு காரணமாக 24 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 12 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தை உலுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடுப்பூசியை திருடிய திருடர்கள்: மீண்டும் திருப்பி கொடுத்த மன்னிப்பு கேட்ட அதிசயம்!