Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

Advertiesment
திருவண்ணாமலை

Siva

, வியாழன், 13 நவம்பர் 2025 (18:14 IST)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஒரு பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி, சிறுவன் உட்பட இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இருவரும் முயல் வேட்டையாட சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
சாமூண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் குப்பந்தம் கிராமத்தில் பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் இருந்தபோது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தை மறைக்கும் நோக்கத்துடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் பண்ணைக்கு அருகில் இருந்த கிணற்றில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
 
செங்கம் காவல்துறையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைக்கவே, அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிணற்றிலிருந்து உடல்களை மீட்டெடுத்த போலீசார், அவற்றை உடற்கூறு ஆய்வுக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
விவசாய நிலத்தின் உரிமையாளரான பாஷாவை காவல்துறையினர் பிடித்து விசாரணைக்காக தற்போது காவலில் வைத்துள்ளனர். இந்த சட்டவிரோத மின்வேலி மற்றும் உயிரிழப்புகளுக்கான சூழ்நிலைகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!