Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசிகவின் 2 வேட்பாளர்கள் யார் யார்? ரவிகுமார் எம்பி தகவல்..!

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:23 IST)
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்ற தகவலை ரவிக்குமார் எம்பி சற்றுமுன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகள் வரை கேட்ட நிலையில் அதன் பிறகு மூன்று தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்றும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. 
 
ஆனால் திமுக ஏற்கனவே விடுதலை சிறுத்தை கட்சிக்கு கடந்த முறை அளிக்கப்பட்ட இரண்டு தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று திமுக உறுதி செய்தது என்பதையும், அதற்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து விட்டார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியிட்ட திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகிய இருவரும் போட்டியிட இருப்பதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரத்தில் மீண்டும் திருமாவளவன் போட்டியிடுவார் என்றும் விழுப்புரத்தில் நான் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments