Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6ம் வகுப்பு மாணவியின் ஆடையை கிழித்த தலைமை ஆசிரியர்? உறவினர் முற்றுகையால் பரபரப்பு..!

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (19:15 IST)
சிவகங்கை அருகே உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவியின் ஆடையை தலைமை ஆசிரியர் கிழித்ததாக கூறப்படும் நிலையில் மாணவியின் உறவினர்கள் திடீரென பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை என்ற பகுதியை அடுத்து காரைக்குடி என்ற கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் சீருடையை தலைமை ஆசிரியர் பிரிட்டோ என்பவர் கிழித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது 
 
இது குறித்து அழுது கொண்டே அந்த மாணவி அருகில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பள்ளி முன் திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர் 
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றனர். தலைமை ஆசிரியரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டதை அடுத்த அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்