Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணைவேந்தர் நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றபடவில்லை… திருமா வளவன் புகார்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:28 IST)
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் தலித் துணை வேந்தர்கள் ஒருவர் கூட இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவாளவன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் பேசிய அவர் ’தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டியல் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட துணைவேந்தராக இல்லை. தகுதியானவர்கள் இருந்தும் அவர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட உள்ள பெரியார் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் பட்டியல் இனத்தவர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என ஆளுநரிடம் கூறியுள்ளேன்’ எனத் தெரிவித்தார்.

அதற்கு ஆளுநர் இது சம்மந்தமாக தமிழக அரசு சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினால்  இட ஒதுக்கீட்டை பின்பற்ற தயார் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments