காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

Siva
திங்கள், 7 ஜூலை 2025 (07:40 IST)
இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த கண்கொள்ளாக் காட்சியை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். 
 
இன்று காலை 6:15 முதல் 6:50 வரை இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக, கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு வழிபாடு செய்யப்பட்டது. வாசனை திரவியங்கள் நீராட்டுக்கு பின்னர், ராஜகோபுரம், மூலவர், வள்ளி, தெய்வானை விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. 
 
தொடர்ந்து தமிழில் வேதங்கள் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் இன்று காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், சண்முக விலாச மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்படும் என்றும், அதன் பிறகு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்த குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர் என்பதும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments