Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்லூர் ராஜூவை எதிர்த்து தெர்மாகோல் விட்டு போராட்டம்!

செல்லூர் ராஜூவை எதிர்த்து தெர்மாகோல் விட்டு போராட்டம்!
, சனி, 12 மே 2018 (18:05 IST)
ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் ஆச்சியை பிடிக்கலாம் என சர்ச்சைக் கருத்தை கூறினார் செல்லூர் ராஜூ. இதற்கு அவரை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. 
 
சமீபத்தில் நடைபெற்ற காலா இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், நதிகள் இணைப்பே தனது வாழ்நாள் லட்சியம் எனத் தெரிவித்திருந்தார். 
 
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது, வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என கிண்டலடித்துப் பேசினார்.
 
ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் வயது முதிர்ந்த பெண்களை குறிக்கும் சொல் என்பதால் அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தியதாக இருப்பதாக காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன தெரிவித்து இருந்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து புதுக்கோட்டையில் தெர்மாகோல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அவர் வலைகை ஆற்று நீர் ஆவியாகமால் இருக்க தெர்மகோல் விட்டது போல, தெர்மகோல் விட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச கூடாது: யாரை தாக்குகிறார் ஜெயகுமார்?