Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

55 நாட்களுக்கு காரைக்குடியில் தங்குகிறார் விஷால்

Advertiesment
55 நாட்களுக்கு காரைக்குடியில் தங்குகிறார் விஷால்
, செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (18:53 IST)
‘சண்டக்கோழி 2’ படத்தின் ஷூட்டிங்கிற்காக 55 நாட்கள் காரைக்குடியில் தங்குகிறார் விஷால். லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை, விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங், சிறிய இடைவேளைக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மறுபடியும் தொடங்கியிருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்றுவரும் இந்த ஷூட்டிங்கில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்பட அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஷெட்யூல் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கு நடைபெறுகிறது. எனவே, 55 நாட்களுக்கு காரைக்குடியில் தங்குகிறார் விஷால்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெட்ரோல் பங்கில் வேலை செய்த அனுஷ்கா