Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் இருக்கு - பள்ளிக்கூடம் இல்லை - கேப்டன் விஜயகாந்த் வேதனை

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (14:09 IST)
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசு , குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்று நடிகர் விஜயகாந்த் இன்று  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’தென்காசி மாவட்டம் V.K. புதூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் சுமார் 200 குழந்தைகள் கோவிலிலும், கல்யாண மண்டபத்திலும் கல்வி கற்கும் அவல நிலை நீடித்து வருகிறது.

தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள், அதிநவீன பார்கள், டெட்ரா பேக்குகளில் மது விற்பனை, வெளிநாட்டு மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது என டாஸ்மாக் விற்பனையிலும் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றுவதிலும் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டுமென தே.மு.தி.க சார்பில் வலியறுத்துகிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments