Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸ் சோதனை

Advertiesment
டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வீட்டில் போலீஸ் சோதனை
, புதன், 14 மார்ச் 2018 (17:41 IST)
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி டிரெக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் 11 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் மாணவிகளை டிரெக்கிங் அழைத்து சென்றதே உயிர்ப்பலிக்கு காரணம் என துணை முதல்வர் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் டிரெக்கிங் அழைத்து சென்ற சென்னை டிரெக்கிங் கிளப், வனத்துறையின் அனுமதி பெற்றே டிரெக்கிங் அழைத்து சென்றதாக கூறியது

இந்த நிலையில் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரின் பாலவாக்கம் வீடு மற்றும் அலுவலகத்தில் சற்றுமுன் தேனி மாவட்ட தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனை குறித்து காவல்துறையினர்  வேறுஎந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உ.பி தேர்தலில் பாஜகவை தோற்கடித்தது சமாஜ்வாதி கட்சி