Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சகஜ நிலைக்கு வரட்டும்... திரையரங்குகள் திறப்பு குறித்து கடம்பூரார்!!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
கொரோனா பாதிப்பு சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு என தகவல். 
 
நடிகர் சூர்யா நடித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் தயாரான ‘சூரரை போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியிடப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 
மேலும் சில பெரிய ஹீரோ படங்களும் ஓடிடிக்கு விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்பட்டால் மட்டுமே பெரிய படங்கள் நழுவுவதை நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் திரையரங்குகளை திறப்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ செப்டம்பர் 1ம் தேதி மத்திய அரசு திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதை தொடர்ந்து தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது மற்றும் அதற்கான விதிமுறைகள் வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். 
 
ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு சகஜ நிலைக்கு வந்த பின்னர் தான் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு என அதிரடியாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments