வடகிழக்கு பருவமழையால் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு குறையும் என கூறப்படுகிறது
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் தொடங்கும் நிலையில், இந்த முறை அக்டோபர் பாதியிலேயே தொடங்கி மழை வெளுக்கத் தொடங்கியது. மேலும் வங்கக்கடலில் முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், அதன் பின்னர் மோன்தா புயலும் உருவாகியுள்ளன.
பொதுவாக வங்கக்கடலில் புயல் உருவாகி கரையை கடந்தால் அதன் பின்னர் சில நாட்களுக்கு மழை குறைந்துவிடும். அதுபோலவே தற்போது பல மாவட்டங்களில் வெயில் வீசத் தொடங்கியுள்ளது. இந்த நிலை நவம்பர் 10 வரை தொடரும் என சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10க்கு பிறகு பருவமழை தீவிரமடைந்து வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும் என்றும், பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K