Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

Rain

Prasanth Karthick

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (18:45 IST)

தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையிலும் பல பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை அவ்வபோது பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து நிலத்தை குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தற்போது செப்டம்பரிலும் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ள நிலையில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்று இரவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!