Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

7 மாவட்டங்களில் காத்திருக்கிறது செம மழை! வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

Rain

Prasanth Karthick

, புதன், 11 செப்டம்பர் 2024 (11:12 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல சுழற்சியால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே மழை பொழிவு ஓரளவு இருந்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!