Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 மாவட்டங்களில் காத்திருக்குது செம மழை! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Rain

Prasanth Karthick

, புதன், 14 ஆகஸ்ட் 2024 (08:31 IST)

கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 9 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், மற்றும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை, விழுப்புரம் பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது.

 

நேற்று கன்னியாக்குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் இன்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு 

மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு