Publish Date: Wed, 16 Oct 2019 (18:32 IST)
Updated Date: Wed, 16 Oct 2019 (18:38 IST)
பாம்பை கண்டாலே படையும் நடுங்கும் என சொல்வார்கள். அதைக் கண்டு அலறுவதற்குக் காரணமே அதன் நச்சுத் தன்மை தான். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு அணைப் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கள்ளிக்காடு பகுதியில் வசிக்கும் புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஏறி சுற்றிக்கொண்டது.அதனால் பயந்துபோன தொழிலாளி அலறியடித்து பதறினார். ஆனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் உடன் இருந்த தொழிலாளர்கள் அந்த பாம்பை மெதுவாக எடுத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட விடு... தொழிலாளி கழுத்தில் சுற்றிக்கொண்ட மலைப்பாம்பு ! மக்கள் அதிர்ச்சி
பாம்பைப் கண்டாலே படையும் நடுங்கும் என சொல்வார்கள். அதைக் கண்டு அலறுவதற்குக் காரணமே அதன் நச்சுத் தன்மை தான். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு சுற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாறு அணைப் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கள்ளிக்காடு பகுதியில் வசிக்கும் புவனச்சந்திரன் என்ற தொழிலாளியின் கழுத்தில் மலைப்பாம்பு ஏறி சுற்றிக்கொண்டது.அதனால் பயந்துபோன தொழிலாளி அலறியடித்து பதறினார். ஆனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் உடன் இருந்த தொழிலாளர்கள் அந்த பாம்பை மெதுவாக எடுத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.