Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விண்ணைத் தொட்ட பூக்கள் விலை.. ஒரு கிலோ மல்லி 2500 ரூபாயா? - மக்கள் அதிர்ச்சி!

Flower Market

Prasanth Karthick

, ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (09:43 IST)

இன்று ஓணம் பண்டிகை, முகூர்த்த நாள் சேர்ந்து வந்த நிலையில் பூக்கள் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

 

 

இன்று ஓணம் பண்டிகை பல வீடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபக்கம் ஆவணி இறுதியில் வரும் முகூர்த்த நாள் என்பதால் பல பகுதிகளிலும் திருமண சுபகாரியங்கள் விமர்சையாக நடந்து வருகிறது. இதனால் பூக்களுக்கு ஏக கிராக்கி எழுந்துள்ளது.

 

இதனால் தமிழகம் முழுவதும் பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்வை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மதுரை பூ மார்க்கெட்டில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2500 வரை விற்பனையாகி, பின்னர் ரூ.1500 வரை குறைந்தது. முல்லைப்பூ ரூ.800க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.300, நாட்டு சம்பங்கி ரூ.500, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டர் ரோஸ் ரூ.300 ஆகிய விலைகளில் விற்பனையாகி வருகிறது.

 

நாளை ஆவணி கடைசி முகூர்த்தம் என்பதால் நாளையும் பூக்கள் இதே விலையில் நீடிக்கும் என வியாபாரிகள் கூறியுள்ள நிலையில் பூக்களின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுவதும் ரத்து! - பயணிகள் அவதி!