Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்கள் முழுவதும் ரத்து! - பயணிகள் அவதி!

Advertiesment
Electric Train

Prasanth Karthick

, ஞாயிறு, 15 செப்டம்பர் 2024 (09:26 IST)

தாம்பரம் பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பயணிகளை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

 

 

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால் கடந்த மாதம் பல மின்சார ரயில்கள், வெளியூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது, வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தாம்பரம் வழியாக ரயில்கள் வழக்கம்போல இயங்கி வந்தன.

 

இந்நிலையில் இன்று தாம்பரம் பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 

அதேநேரம் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 

 

இன்று விநாயகர் சதுர்த்திக்கு வைத்த சிலைகள் கடற்கரைகளில் கரைக்கப்பட உள்ள நிலையில் மக்கள் கடற்கரை நோக்கி செல்லும் நிலையில், இந்த மின்சார ரயில்கள் ரத்து பயணிகளுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு.. ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்களின் நிலை என்ன?