Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 19 March 2025
webdunia

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

Advertiesment
கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

Prasanth Karthick

, செவ்வாய், 18 மார்ச் 2025 (14:43 IST)

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய விவாதத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பட்ஜெட் மீது பல கேள்விகளை எழுப்பினார்.

 

”அண்ணாவின் கோட்பாடுகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நிதிநிலை அறிக்கையில் ஒன்று கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை” என்று செல்லூர் ராஜூ கூற, அதற்கு குறுக்கிட்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் “உங்களுக்கு தெரியவில்லை என்றால் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போடவும்” என கிண்டல் செய்தார்.

 

தொடர்ந்து கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜூ கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட குறைவான நிதியே செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய நிலையில், பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, அதிமுக ஆட்சியில் அறிவித்த பசுமை வீடு திட்டம் முழுமையாக செயல்படுத்தாமல் இருந்த நிலையில், அந்த திட்டத்தின் கீழ் நிறைவு செய்யாத வீடுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.

 

தொடர்ந்து செல்லூர் ராஜூ, பள்ளி கட்டிடடங்கள் கட்டுவது, பேருந்துகள் வாங்கப்பட்டது குறித்த பல கேள்விகளை எழுப்பிய நிலையில் அந்தந்த துறை அமைச்சர்கள் அவரது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு