Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவியை காதலிக்குமாறு மிரட்டிய நபர் கைது!

மாணவியை  காதலிக்குமாறு மிரட்டிய நபர் கைது!
, புதன், 4 ஜனவரி 2023 (19:03 IST)
சென்னையில் என்ஜினியரிங் படித்து வரும் மாணவிக்கு காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வேணுகோபால் என்ற நபர் மனைவியை இழந்து, ஒரு குழந்தையுடன் வசித்து வரும் நிலையில், என்ஜினியரிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவியை ,தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, அந்த மாணவி , கோட்டூர்புரம்  போலீஸில் வேணுகோபால் மீது புகார் கொடுத்துள்ளார்.

5 மாதங்களாக இதேபோல் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாகக் கூறி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாணவியின் புகாரை அடுத்து, போலீஸார்  வேணுகோபால்  மீது கொலைமிரட்டல், வன் கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கைது செய்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்.. ரஷ்ய இளைஞரிடம் போலீஸ் விசாரணை!