Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாரி மோதி பெண் இன்ஜினியர் பலியான விவகாரத்தில் 2 பேர் கைது!

chennai
, புதன், 4 ஜனவரி 2023 (14:38 IST)
சென்னை மதுரவாயலில் பெண் இன்ஜினியர் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலியானார். இந்த விவகாரத்தில் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை  மதுரவாயல் என்ற பகுதியில் மென் பொறியாளர் ஷோபனா  நேற்று  காலை  தன் இரு சக்கர வாகனத்தில் தன் தம்பியை அழைத்துக் கொண்டு  சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சர்வீஸ் சாலை குண்டும்  குழியுமான இருந்ததால், பள்ளத்தைத் தவிர்க்க ஷோபனா முயன்றபோது, முந்திச் செல்ல முயன்ற வேன் ஒன்று இவரது வாகனம் மீது மோதியதில், ஷோபனா நிலை தடுமாறி  கீழே விழுந்தார். அவர் மீது பின்னார் வந்த லாரி மோதியதில்  லாரி சக்கரத்தில் சிக்கி சோபனா(20) பலியானார்.

இந்த விவகாரத்தில்  பார்த்திபன், மோகன் ஆகிய 2 ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மோசமான சாலையால் எங்கள்  ஊழியரை இழந்துவிட்டதாக  பெண் இன்ஜினியர் பணியாற்றிய நிறுவனத்தின் சி இ ஓ ஸ்ரீவேம்பு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாவில் இருந்த குழந்தை உயிரிழந்ததால் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்ற பெற்றோர்!