Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவன்! அடித்து உரித்த மனைவி, மாமியார்!

Prasanth Karthick
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:41 IST)
மனைவியின் கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதற்காக மனைவியும், மாமியாரும் சேர்ந்து கணவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழுவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரபு (38). இவருக்கும் அத்தியூரை சேர்ந்த சுகந்தி (30) என்பவருக்கும் சில ஆண்டுகள் முன்னதாக திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அரிதாகவே சொந்த ஊருக்கு வந்து செல்வதுண்டு.

இந்நிலையில் சுகந்திக்கு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது வெளிநாட்டில் வேலைபார்க்கும் பிரபுவுக்கு அரசல் புரசலாக சென்று சேர்ந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நாடு திரும்பிய பிரபு, இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது தாய், தந்தை, சகோதரன் என எல்லாரையும் திரட்டிக் கொண்டு வந்து பிரபுவை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

ALSO READ: ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க- கவனம் ஈர்க்கும் பாட்டல் ராதா டீசர்!

இதுகுறித்து பிரபுவின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பிரபுவின் மனைவி சுகந்தி மற்றும் மாமியார் சுமதியை கைது செய்துள்ளனர். தலைமறைவான பிரபுவின் மாமனாரையும், மச்சானையும் தேடி வருகின்றனர். கள்ளக்காதலை தட்டிக் கேட்டதற்காக கணவன் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவுக்காக ராயப்பேட்டை கோவில்கள் இடிக்கப்படுகிறதா? நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்..!

ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு! – நீதிமன்றம் சொல்லும் காரணம் என்ன?

கடலோர மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான ஆய்வுக் கூடம்! - சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் புதிய ஆய்வகம்!

கனமழை எதிரொலி: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று: மழை குறித்த எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments