Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:31 IST)
நெல்லை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக நெல்லை மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டம் ஏற்பாடு செய்யும்போது திமுக கவுன்சிலர்கள் போதிய அளவில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் திடீரென நெல்லை மேயர் சரவணன் சென்னை சென்றுள்ளதாகவும் அங்கு அவர் திமுக தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அதற்கான கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 இந்த தகவல் இன்னும் திமுக தலைமை தரப்பிலிருந்து உறுதி செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் மட்டும் இந்த தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
உண்மையிலேயே நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்து விட்டாரா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் நெல்லை திமுக கவுசர் அவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments