Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பலாத்காரம் செய்த போலி பூசாரி !

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (20:42 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மணிப்பிள்ளையைப் பகுதியில் வசித்து வரும் பழனி என்ற பூசாரி ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 15 வயதில் மகள் இருக்கிறார்.  அவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனைக்குச் சென்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.

இந்த நிலையில்,அருகிலுள்ளவர்கள் பூசாரியிடம் மந்திரித்து வந்தால் வயிற்று வலி சரியாகும் என கூறியுள்ளனர். இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர், பழனி என்ற பூசாரியிடம் அழைத்துச் சென்றனர்.

அவர், சிறுமியுக்கு தனிமையில் பூஜை செய்ய வேண்டுமென  கூறி பெற்றோரை வெளோய்யே அனுப்பிவிட்டு,  சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் சொன்னால் சாமி குத்தமாகிவிடும் என மிரட்டியதாகத் தெரிகிறது.

பின்னர் சிறுமி 3 மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பூசாரி மீது போலீஸில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்