Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் ! சிறுமிக்கு பிறந்த ஆண்குழந்தை ...பகீர் சம்பவம்

Webdunia
வெள்ளி, 14 ஜூன் 2019 (15:25 IST)
தமிழகத்தின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிற்ந்துள்ளது. சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி  எமாற்றி கர்ப்பமாக்கிய ஒடிஷா இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது பெற்றோர் ஒரு பனியல் கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது தனியாக இருந்த சிறுமியுடன் பழகி வந்த ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த அஜித் கிரஷல் (26) என்பவர் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவானார்.
 
அதன் பிறகு சிறுமிக்கு வயிற்றில் வலி உண்டாகியுள்ளது. பின்னர் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஒடிஷாவைச் சேர்ந்த அஜித் கிரஷல் மீது போலீஸ் புகார் தெரிவித்தனர்.
 
தற்போது போலிஸார் அஜித் கிரஷலை தேடிவருகின்றனர். 13 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ள செய்தி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்! - வங்கிகளுக்கு RBI அதிரடி உத்தரவு!

ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments