Publish Date: Wed, 05 Jun 2019 (17:25 IST)
Updated Date: Wed, 05 Jun 2019 (17:36 IST)
எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 போலீஸார் பலியாகினர்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எகிப்தில் மேற்கில் உள்ள சினாய் தீபகற்கம் பதற்றம் மிகுந்த பகுதியாக அறியப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி மீது வெடிகுண்டு வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 10 போலீஸார் உயி்ரிழந்தனர். சோதனைச் சாவடியும் கடுமையாக சேதமடைந்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்றவில்லை என்பதால் போலிஸார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.