Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பெரும் பதட்டம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு: பெரும் பதட்டம்
, திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (07:13 IST)
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் நீடித்து வருகிறது. 
 
 
வேதாரண்யம் பகுதியில் நேற்று ஒருவர் ஜீப்பில் வந்தபோது சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியுள்ளார். இந்த விபத்து காரணமாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு அந்த தகராறு இரு பிரிவினர் தகராறாக மாறிவிட்டது. இதனையடுத்து ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். இதனை தடுக்க வந்த போலீசார் மீதும் போலீஸ் நிலையம் மீதும் கற்கள் வீசப்பட்டதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
 
 
இந்த நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து நாகை-நாகூர் நெடுஞ்சாலையில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
 
இரு பிரிவினர் இடையே மேலும் பிரச்சனை பெரிதாகாமல் இருக்க  ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதிக்கு அதிவிரைவு படை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் தலைமை செயலகத்தில் இறக்கப்பட்ட மாநிலக்கொடி: பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி!