Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!

Webdunia
திங்கள், 20 மே 2019 (17:31 IST)
தன்னைக் காதலிக்க வேண்டும்  என வலியுறுத்தி சிறுமியைத் தாக்கிய வாலிபனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் லட்சுமிபுரம் செகரெட்டரியேட் காலனியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளான்.
 
நேற்று முன்தினம் மாலையில் அந்த சிறுமியை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.  அதற்கு சிறுமி மறுக்கவே அவளை அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
மேலும் தன்னை காதலிக்க வேண்டும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்த நிலையில் நேற்று காலையில்  போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments