Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!

காதலிக்குமாறு சிறுமியை அடித்து மிரட்டிய கொடூரன்!
, திங்கள், 20 மே 2019 (17:31 IST)
தன்னைக் காதலிக்க வேண்டும்  என வலியுறுத்தி சிறுமியைத் தாக்கிய வாலிபனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் ( 18). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 
இந்நிலையில் லட்சுமிபுரம் செகரெட்டரியேட் காலனியில் வசித்து வந்த 17 வயது சிறுமியிடம் தன்னைக் காதலிக்க வேண்டும் என்று தொல்லை கொடுத்துள்ளான்.
 
நேற்று முன்தினம் மாலையில் அந்த சிறுமியை வழிமறித்து தன்னைக் காதலிக்க வேண்டும் என மிரட்டியுள்ளான்.  அதற்கு சிறுமி மறுக்கவே அவளை அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
மேலும் தன்னை காதலிக்க வேண்டும் இல்லை என்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளான். இதனையடுத்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்த நிலையில் நேற்று காலையில்  போலீஸார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவில் இருந்து திடீரென விலகும் பிரபலம்: அதிர்ச்சியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ்