Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச்சாயம்: தங்கம் தென்னரசு கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (15:55 IST)
தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசப்பட்ட பிரச்சனை கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் அதே பிரச்சனை எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
 
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் சமீபத்தில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் குறித்த ஒளிபரப்பில் திருவள்ளுவர் புகைப்படத்திற்கு காவியுடை பொருத்தப்பட்டிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 
 
திருவள்ளுவரின் உடையில் காவி சாயம் பூசப்பட்டதற்கு முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அவர் இதுகுறித்து கூறியதாவது. எவராக இருப்பினும் இந்த செயலை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகைய செயல்கள் வருங்காலத்தில் நடைபெறாது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் தமிழ் பற்று மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே சர்ச்சை கிளம்பி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments