Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: வழக்கு தொடரப்படுகிறதா?

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (10:09 IST)
டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போட்டித் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் டெட் பட்டதாரிகள்,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அறிவித்தபடி பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வுக்கான ஆன்லைன் பதிவு நாளை தொடங்குகிறது என்ற அறிவிப்பு வெளியான நிலையில் போட்டித் தேர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம் என டெட் பட்டதாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments