Publish Date: Sun, 13 Jun 2021 (10:23 IST)
Updated Date: Sun, 13 Jun 2021 (15:38 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மதுபானங்களை மொத்தமாக ஒருவருக்கே விற்பனை செய்யக்கூடாது,
அனைத்து மதுக்கடைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை கண்காணிக்க இரண்டு பணியாளர்கள் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.