Publish Date: Sat, 12 Jun 2021 (23:28 IST)
Updated Date: Sat, 12 Jun 2021 (23:30 IST)
இந்திய அணி அடுத்த மாதம் இங்கைக்குச் சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது.
இத்தொடரில் நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடத்தப்படும் எனக் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
இதற்கிடையே விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
எனவே இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணியினர் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
மேலும் வரும் ஜூன் 28 ஆம் தேதி மும்பையில் இருந்து இலங்கை செல்லும் இந்திய அணியினர் அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.