150 ரூபாய் லஞ்சம் வாங்கியவர் 6 ஆண்டுகளாக தலைமறைவு.. தற்போது அதிரடி கைது..!

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (16:47 IST)
1998 ஜனவரி மாதம், டாஸ்மாக் ஊழியராக பணிபுரிந்து வந்த பிரேம்குமார், ரூ.150 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2008-ல் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து, பிரேம்குமார் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தார். ஆனால், இரண்டு நீதிமன்றங்களும் அவரது மனுக்களை தள்ளுபடி செய்தன.
 
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகு பிரேம்குமார் தலைமறைவானார். ஆறு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அவரை, தற்போது காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments