Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்னலே கிடைக்கல.. ஆன்லைன் வகுப்புக்காக மலை பயணம்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (10:12 IST)
ஆன்லைன் வகுப்புகளை படிக்க இணைய சேவை சிக்னல் கிடைக்காததால் மலையடிவார மாணவர்கள் மலைக்கு மேல் ஏற வேண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளை படிக்க செல்போன், இணைய வசதி இல்லாதது பல மாணவர்களுக்கு பின்னடைவாய் அமைந்துள்ள நிலையில், செல்போன், மடிக்கணினி இருந்து ஆன்லைன் வகுப்புகளை படிக்க முடியாத நிலையில் உள்ளனர் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள்.

மலையடிவார பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகளை படிக்கும் அளவிற்கு இணைய சேவை கிடைக்காத காரணத்தால் தினமும் மலை மீது பல மணி நேரங்கள் ஏறி செல்ல வேண்டியதாக உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி பச்சைமலை மாணவர்கள் தினமும் பல மீட்டர் தூரம் மலையில் ஏறி சென்று ஆன்லைன் வகுப்புகளை படிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒரே ஒரு டவர் மட்டுமே இருப்பதால் அனைவருக்கும் இணைய வசதியும் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments