Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 8 வரை தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth Karthick
செவ்வாய், 4 மார்ச் 2025 (14:23 IST)

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில் வரும் 8ம் தேதி வரை படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, இன்று முதல் 8ம் தேதி வரை அதிகபட்சமாக வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வானிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிசி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும், குறைந்த பட்ச வெப்பநிலை 24-25 டிகிசி செல்சியஸை ஒட்டி இருக்கும்

 

மார்ச் 10ம் தேதியில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். அதுவரை வறண்ட வானிலையே நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments