Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் கேம் விளையாட கூடாது என கண்டித்த பெற்றோர்.. 3 பேரை கொலை செய்த வாலிபர்..!

Mahendran
செவ்வாய், 4 மார்ச் 2025 (14:15 IST)
ஆன்லைனில் கேம் விளையாடிக் கொண்டிருந்த வாலிபரை அவரது பெற்றோர் கண்டித்த நிலையில், அந்த இளைஞர் ஆத்திரத்தில் தனது பெற்றோர், சகோதரி என மூவரை கொலை செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா மாநிலத்தில் சூரியகாந்த் என்ற 21 வயது கல்லூரி மாணவன் எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி இருப்பதை பார்த்து, அவரது பெற்றோரும் சகோதரியும் கண்டித்துள்ளனர். ஆனால், சூரியகாந்த் அதை நிறுத்துவதாக தெரியவில்லை.
 
இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் ஆன்லைனில் கேமில் மூழ்கியிருந்த சூரியகாந்த்தை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த அவர், அருகிலிருந்த கடுமையான பொருளை எடுத்து, தனது தாய், தந்தை மற்றும் சகோதரியை தாக்கியுள்ளார்.
 
இந்த தாக்குதலில் சூரியகாந்த்தின்  தந்தை, தாய் , சகோதரி என மூவரும் உயிரிழந்தனர். சம்பவத்திற்குப் பின்னர், சூரியகாந்த் தப்பி ஓடிவிட்டதாகவும், பின்னர் கைது செய்யப்பட்ட போது தனது பெற்றோரையும் சகோதரியையும் கொன்றதை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments