Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கல்லூரிகளில் சேர ஆன்லைன் தளம் தொடக்கம்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (08:57 IST)
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் இணையதளம் இன்று மாலை முதல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் திடீரென முன்னறிவிப்புகள் ஏதுமின்றி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. அதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு முறையை அரசு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வீட்டிலிருந்தபடியே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்காக தமிழக அரசு Tngasa.in என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளம் மூலமாக 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இன்று மாலை 6 மணிக்கு இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments