Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை தவிர பிற மாவட்டங்களில் 3725 பேர்களுக்கு கொரோனா: பரபரப்பு தகவல்

Advertiesment
அரியலூர்
, ஞாயிறு, 19 ஜூலை 2020 (18:58 IST)
தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கடந்த மாதம் வரை கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது சென்னையை விட பிற மாவட்டங்களில் பரவும் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மொத்தம் 4979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 1254 பேர் மட்டுமே. மீதி 3,725 பேர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
 
சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 405 பேர்களுக்கும், செங்கல்பட்டில் 306 பேர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேர்களுக்கும், விருதுநகரில் 265 பேர்களுக்கும், மதுரையில் 206 பேர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது. 
 
இன்றைய பாதிப்பில் மிகவும் குறைவாக ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்களுக்கும், கிருஷ்ணகிரியில் 7 பேர்களுக்கும், அரியலூரில் 14 பேர்களுக்கும், பெரம்பலூரில் 10 பேர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
webdunia
சென்னை தவிர பிற மாவட்டங்களில் 3725 பேர்களுக்கு கொரோனா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 4979