Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவன் சன்னதிக்கு வந்த ஆமை; கொரோனா பூஜை செய்த அர்ச்சகர்கள்!

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (08:39 IST)
தெலுங்கானாவில் சிவன் கோவில் ஒன்றில் நுழைந்த ஆமையை கொண்டு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்திய விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தெலுங்கானாவில் சில்கூர் பெருமாள் ஆலயத்தின் உள்ளே உள்ள சிவன் சன்னதியில் ஆமை ஒன்று புகுந்துள்ளது. இதை கண்ட அர்ச்சகர்கள் மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான கூர்ம அவதாரமாக அதை பாவித்து, அதற்கு நாமமிட்டு சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். மேலும் சிவன் சன்னத்திக்குள் மகாவிஷ்ணுவின் அவதாரம் நுழைந்திருப்பது கொரோனா விரைவில் அழியும் என்பதற்கான அறிகுறி என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவிலில் ஆமையை வைத்து நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments