Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாமி பேர சொல்லி வெளியே வந்துராதீங்க... இன்று முழு பொது முடக்கம்!!

சாமி பேர சொல்லி வெளியே வந்துராதீங்க... இன்று முழு பொது முடக்கம்!!
, ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (09:41 IST)
இன்று முழு ஊரடங்கு என்பதால், மக்கள் வெளியே செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் நாளை முழு முடக்கம் என்பதால் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது.  
 
நாளை பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை எனவும் ஊரடங்கை மீறி வேறு வாகனங்கள் வந்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையின்றி வெளியே வருவது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது. 
 
எனவே, நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால், வீட்டில் வைத்து வழிபட்ட களிமண் சிலைகளை பொதுமக்கள் இன்றிலிருந்து நீர்நிலைகளில் கரைக்க தொடங்குவர். இன்று முழு ஊரடங்கு என்பதால், மக்கள் வெளியே செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே நாளை விநாயகர் சிலைகளை கரைக்கலாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: முதல் முதலாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்