Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மழை!

Advertiesment
நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மழை!
, புதன், 30 மார்ச் 2022 (14:33 IST)
நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல். 

 
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பலர் சாலையோர இளநீர் கடைகள், பழச்சாறு கடைகளை நாடும் நிலை உள்ளது.
 
இந்நிலையில் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 
 
மேலும், நாளை முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பான் - ஆதார் இணைக்க நாளை கடைசி தேதி... இல்லையெனில்...