Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவு பணி செய்யும் டிராபிக் காவலர்களுக்கு விடுமுறை! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!

இரவு பணி செய்யும் டிராபிக் காவலர்களுக்கு விடுமுறை! – போக்குவரத்து காவல் அறிவிப்பு!
, புதன், 30 மார்ச் 2022 (11:06 IST)
சென்னையில் இரவு நேரங்களில் டிராபிக் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் முக்கிய சாலைகளில் கூட்ட நெரிசல் இரவு நேரங்களிலும் நீடிக்கும் நிலையில் போக்குவரத்து காவலர்கள் பல பகுதிகளில் இரவு நேர போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறாக இரவு பணிகளில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இரவு பணிக்கு அடுத்த நாள் மதியம் முதல் வேலைக்கு வர வேண்டாம் என்றும், ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஆர்பிஎப் சாவடியில் குண்டு வீசிய பெண்! – ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி!