Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை - வானிலை அப்டேட்!

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை - வானிலை அப்டேட்!
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (14:14 IST)
வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல். 

 
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாக வடகிழக்கு பருவக்காற்றால் தொடர் மழை பெய்து வந்தது. மேலும் வங்க கடலில் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் பல மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமான மழை பொழிந்தது.
 
கடந்த சில நாட்களாக புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகாத நிலையில் மிதமான அளவில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டையில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும், 19 ஆம் தேதி வட கடலோர் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என தகவல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம்